புளூவேல் விளையாட்டால் தாயை கொடுமைப்படுத்தும் மகன்.. இது வேற லெவல்!- வீடியோ

  • 6 years ago
ஜெயங்கொண்டம் அருகே புளூவேல் விளையாட்டால் தாயை மகன் கொடுமைப்படுத்தும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 'புளூவேல்' என்ற இணைய தள விளையாட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவியது. இதில், இளைஞர்களும், மாணவர்களும் தங்களை பதிவு செய்து விளையாடி வருகின்றனர்.
'புளூவேல்' விளையாட்டில் '50' சவால்கள் அளிக்கப்படுகிறது. ரயில் பாதையில் ரயில் வரும் போது செல்பி எடுப்பது, பேய் படம், அதிகாலையில் எழுவது நள்ளிரவில் மயானத்துக்கு செல்வது, கையில் பிளேடால் அறுத்துக்கொள்வது, மாடியில் இருந்து குதிப்பது என்பது உள்ளிட்ட சவால்கள் விடுக்கப்படுகிறது.இந்த ‘புளூவேல்' விளையாட்டால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் புளூவேல் விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல மாணவர்களும், வாலிபர்களும் இந்த விளையாட்டிற்கு அடிமையாகி தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்த விளையாட்டுக்கு அடிமையானவர்களை போலீசார் மீட்டு ஆலோசனை அளித்து வருகின்றனர்.

Recommended