கிடைத்தவரை சுருட்ட நினைக்கும் அதிமுகவினர் துரைமுருகன் பேட்டி-

  • 6 years ago
புதிதாக மணல் குவாரிகளை தமிழக அரசு திறக்க நடவடிக்கை எடுத்து வருவதற்கு காரணமே நாள் ஒன்றிற்கு 50 கோடிரூபாய் கொள்ளையடிப்பதற்காக தான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் திமுக இளைஞரணி கூட்டம் நடைபெற்றது. அதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் துரை முருகன் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் முல்லை பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தமானது என்றும் அங்கு கெஸ்ட் ஹவுஸ் கட்ட முதலமைச்சர் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்றார். தமிழகத்தில் தமிழக அரசு புதிதாக மணல் குவாரிகளை திறக்க திட்டமிட்டிருப்பது நாள் ஒன்றிற்கு 50 கோடி ரூபாய் கொள்ளையடிக்க தான் என்றார். மேலும் எந்ததெந்த துறைகளில் எவளவு சுருட்ட முடியும் என்ற நோக்கத்தில் தான் அதிமுகவினர் செயல்பட்டு வருவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

Des : Duraimurugan said that the reason for the Tamil Nadu government to launch new sand quarries is to loot 50 crore rupees a day

Recommended