ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: நவம்பர் 27-ல் வேட்பு மனுத் தாக்கல்; டிசம்பர் 24-ல் ‘கவுண்ட்டிங்’- வீடியோ

  • 6 years ago
ஓராண்டாக தேர்தல் நடைபெறாமல் இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் டிசம்பர் 21-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. இத்தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்ற வழக்குகள் என இழுத்தடிப்புக்குப் பின்னர் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள்: டிச.4
வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை- டிச. 5
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்: டிச. 7
வாக்குப் பதிவு நடைபெறும் நாள்: டிச. 21
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்: டிச. 24

Candidates contesting the RK Nagar Assembly By election can start the filing nominations from Monday

Recommended