அன்புச்செழியனை ஏன் உத்தமர் என்கிறார் சீனு ராமசாமி - இதுதான் காரணமா?- வீடியோ

  • 6 years ago
சசிகுமாரின் மைத்துனரும் தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலை சம்பவம் தமிழ் சினிமா துறையினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல தயாரிப்பாளர்கள் ஃபைனான்சியர்களால் தாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பேட்டி கொடுத்து வருகின்றனர். இயக்குநர் சுசீந்திரன் அன்புச்செழியன் தொடர்பான அதிர்ச்சித் தகவல்களை நேற்று வெளியிட்டார். லிங்குசாமி, கௌதம் மேனன், உட்பட பல பிரபல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அன்புச்செழியனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன். முற்போக்கு சிந்தனை கொண்டவராக எண்ணப்படுகிற சீனு ராமசாமி தனது படங்களில் வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் அரசியல் பேசக்கூடியவர். அன்புச்செழியனை ஜாதிப் பாசத்திற்காகவே சீனு ராமசாமி ஆதரிக்கிறார் எனில் அவர் மீதான ரசிகர்களின் நம்பிக்கையின் மீது பலத்த அடி விழுகிறது. விஜய் சேதுபதியை வைத்து சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' படத்தில் கூட சீட்டுக்கட்டி ஏமாந்துபோகும் மக்களைப் பற்றிய காட்சிகளை வைத்திருப்பார். அவரே ஏன் ஒரு கந்துவட்டி பேர்வழியை ஆதரிக்கிறார் என்பதற்கான நேரடிக் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

Sasikumar's brother-in-law and producer Ashok Kumar's suicide incident has plunged the Tamil film industry into the tragedy. Director Seenu Ramasamy tweeted on his Twitter page, "It is a sad thing to be misinterpreted the perfect person like anbuchezhiyan and I am on the side of justice."

Recommended