அன்புச் செழியன் பெயரைக் கூட உங்களால சொல்ல முடியலையே விஷால்...சுசீந்திரன் சுளீர்!- வீடியோ

  • 6 years ago
நடிகர் சசிகுமாரின் கம்பெனி ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து வந்த அவரது உறவினரும், இணை தயாரிப்பாளருமான அசோக் நேற்று தற்கொலை செய்துகொண்டார். மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் என்பவரால் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்டு இந்த தற்கொலை முடிவை எடுத்ததாக அசோக் தனது கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார். இது பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து இயக்குநர் சுசீந்திரன் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். நடிகர் சசிகுமாரின் மைத்துனரான அசோக், சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார். அவர் நேற்று மாலை ஒரு கடிதம் எழுதிவைத்துவவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டிக் கொடுமையால் மிகவும் துன்பப்பட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக எழுதியிருக்கிறார் அசோக். கந்துவட்டிக்காரர்களால் மிரட்டலுக்கு ஆளானதால் தற்கொலை செய்துகொள்வதாக உருக்கமான கடிம் எழுதியிருக்கிறார். சினிமா ஃபைனான்சியர், தயாரிப்பாளர் என சினிமா மாஃபியாவாக வலம் வரும் அன்புச் செழியன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. நடிகர் சசிகுமார், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் அன்புச் செழியன் மீது கந்துவட்டிக் கொடுமை, தற்கொலைக்குத் தூண்டியது ஆகியவற்றைக் குறிப்பிட்டு புகார் கொடுத்துள்ளார்.

Sasikumar's brother-in-law, Ashok Kumar, who managed the company productions, committed suicide yesterday. The producers council chairman Vishal has issued a statement on this. Director Suseenthiran has asked a question about the press release.

Recommended