ஓபிஎஸ் நிலை எனக்கு வந்திருந்தால் அரசியலை விட்டே போயிருப்பேன்- துரைமுருகன்- வீடியோ

  • 7 years ago
முதல்வர் எடப்பாடி அரசுக்கு பதவியில் இருக்கிறோம் என்ற ஆண்மை இல்லை என்று திமுகவின் முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியின் விடைக்குள் வினா நேர்காணல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று பேசியதாவது : ஜெயலலிதாவிற்கு எதையுமே சாதிக்க வேண்டும் என்ற தீர்க்கம் உண்டு. அவர் ஏன் அமைச்சர்களை பேசாமல் வைத்திருந்தார் என்று இப்போது தெரிகிறது. இவர்களின் திறமை தெரியும், எல்லோரும் உளறுவார்கள் என்று தெரிந்ததால் தான் எல்லாத்தையும் அவரே பேசினார். ஒரு அமைச்சர் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று சொல்கிறார், ஒரு அமைச்சர் டெங்கு வராமல் இருக்க வாசலில் சாணம் தெளிக்கச் சொல்கிறார்,அதே மந்திரி வைகை அணை நீராகாமல் தடுக்க தெர்மகோல் போட்டு மூடுகிறார். இதையெல்லாம் கேட்பதற்கு ஆளில்லை.

ஆளுநர் தமிழகத்தில் ஆய்வு செய்கிறார், அவருக்கு சட்டப்படி பார்த்தால் 2 பணி தான் இருக்கிறது. மாநில அரசு அமைச்சரவையில் எடுத்த முடிவுகளை ஒப்புதல் தரவோ நிறுத்தவோ அதிகாரம் இருக்கிறது. மற்றொன்று மத்திய அரசுக்கு உளவு சொல்வது, ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் இந்த கூட்டத்தை நடத்தக் கூடாது.

DMK senior leader Duraimurugan accuses that government has no guts as they were ruling the state. Tamilnadu CM posting has some dignity but EPS spoiled all the things.

Recommended