அமாவாசை.. திருச்செந்தூர் முருகனை பயபக்தியோடு கும்பிட்ட டிடிவி தினகரன்!- வீடியோ

  • 6 years ago
போயஸ்கார்டனில் ரெய்டு நடந்த நேரத்தில் டிடிவி தினகரன் திருச்செந்தூரில் இருந்தார். அமாவாசை நாளில் சூரசம்ஹார மூர்த்தியை பயபக்தியோடு வழிபட்டுள்ளார் டிடிவி தினகரன். டிடிவி தினகரனுக்கும், சசிகலா குடும்பத்தினருக்கும் தற்போது நேரம் சரியில்லை எனவேதான். வருமானவரி சோதனை விடாமல் விரட்டி வருகிறது. ஆனாலும் அசராமல் பேசுகிறார் டிடிவி தினகரன். எங்களை யாரும் அசைக்கவோ அழிக்கவோ முடியாது என்று கூறினாலும் சமீபத்திய ரெய்டுகள் தினகரனை பதற்றப்படவே வைத்துள்ளது. உறவினர்கள் எல்லோரும் வரிசையாக சிறைக்கு செல்லும் நிலையில் கோவில் கோவிலாக போய் வழிபட்டுக்கொண்டிருக்கிறார் தினகரன். நேற்றைய தினம் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டார். சூரசம்ஹார மூர்த்தியை வழிபட்டால் எதிரிகள் அழிவார்கள் என்பது நம்பிக்கை. ஆனால் அவர் கோவில் கோவிலாக போனலும் துன்பங்கள் விடாமல் விரட்டி வருகிறது.

Admidst IT raids in Jaya's house, TTV Dinakaran paid a visit to Thiruchendur Murugan temple on the eve of Amavasya.

Recommended