தினகரன் அணியில் குடுமிபிடி சண்டை... நாஞ்சில் சம்பத், புகழேந்தி "டிஷ்யூம் டிஷ்யூம்"!- வீடியோ

  • 6 years ago
சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனை பற்றி தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி குடுமிப்பிடி சண்டை போட்டு பேட்டியளித்துள்ளளனர். நவம்பர் 9ம் தேதி முதல் 13 தேதி வரை சசிகலா குடும்பத்தை குறி வைத்து நடத்தப்பட்ட வருமான வரி சோதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று ரெய்டில் சம்பந்தப்பட்டவர்கள் தவிர மற்ற அனைவருமே சொல்லி வருகின்றனர்.

ஆனால் யாரை மையமாக வைத்து ரெய்டு நடத்தப்பட்டதோ அவர்கள் அதாவது விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் வருமான வரி சோதனை வழக்கமானது தான். அவர்கள் கேட்ட ஆவணங்களை அளித்துள்ளோம் என்று கூலாக பதில் சொல்கின்றனர்.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று ஒரு புது குண்டை தூக்கி வீசினார். அப்போது வருமான வரி அதிகாரிகள் ஆவணங்கள் எதையும் சரிபார்க்கவில்லை, அவர்கள் முழுக்க முழுக்க சிடி எங்கே சிடி எங்கே என்று தான் கேட்டார்கள் என்று கூறினார்.
வருமான வரி சோதனை பற்றி திவாகரனே சிடி தான் கேட்டார்கள் என்று கூறி இருந்த நிலையில், அவரை சாடும் வகையில் புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதனால் தினகரன் அணியினர் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துகளை கூறி வருவது அப்பட்டமாக வெளிவந்துள்ளது

ADMK AMMA camp cadres and TTV Dinakaran faction supporters were different opinions about the income tax raids and Pugazhendi cleared there is no truth that officials claims CDs of Jayalalitha hospitalised.

Recommended