"கிருஷ்ணப்ரியா என்னும் நான்"... கனவை நனவாக்க கிடைத்த வருமான வரி சோதனை!- வீடியோ
  • 6 years ago
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரையே பார்த்து வளர்ந்த கிருஷ்ணப்ரியாவின் அரசியல் ஆசை இப்போது தான் அவருக்குக் கை கூடி இருக்கிறது. இதற்கான வாய்ப்பாகவே விவேக்கும், கிருஷ்ணப்ரியாவும் வருமான வரி சோதனையை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவருடனேயே இருந்தவர்கள் சசிகலாவும், அரவது அண்ணன் மனைவி இளவரசியின் குடும்பமும். இளவரசியின் கணவர் ஜெயராமன் உயிரிழக்கவே தன்னுடைய 3 குழந்தைகளுடன் போயஸ் கார்டனுக்கே வந்து பிள்ளைகளை வளர்த்தார் இளவரசி. இளவரசியின் மகள்கள் ஷகீலா, கிருஷ்ணப்ரியா, விவேக் 3 பேருமே போயஸ் கார்டனில் வளர்ந்தவர்கள் தான்.
ஜெயலலிதாவையே பார்த்து வளர்ந்த சசிகலா குடும்பத்திற்கு எப்படி அரசியல் ஆசையோ அது போலத் தான் இளவரசியின் வாரிசுகளுக்கும் அரசியல் ஆசை இருந்துள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே கிருஷ்ணப்ரியா சில அமைச்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். போயஸ்கார்டனில் நடந்த ஒரு உரையாடல் ஒரு அமைச்சர் மூலமாக கசிந்த விவகாரத்தில் கிருஷ்ணப்பிரியாவுக்கு "டோஸ்"விட்டார் ஜெ. அந்த பிரச்னையில் தான் போயஸ் கார்டனை விட்டு துண்டைக் காணோம் துணியைக் காணோம்னு கூடாரத்தை காலி செய்திருக்கிறார் கிருஷ்ணப்ரியா.

Ilavarasi's daaughter Krishnapriya's years back political entry now in favour of her, so she plans to utilise the media light for her political career. Her cool interview depicts her plan.
Recommended