பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் இளைஞர்கள் கைது- வீடியோ

  • 6 years ago
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

நீலகிரி மாவட்டம் மஞ்சூரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். அவர் வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது மனைவி சந்தியரோஜா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அப்பகுதியை சேர்ந்த அஜித்குமார், முரளி ஆகிய இளைஞர்கள் சத்தியரோஜாவிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள சத்தியரோஜா கூச்சலிட்டுள்ளார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை பிடித்து சராமாரியாக அடித்துள்ளனர். பின்னர் அவர்களை போலீசாரிடம் ஒப்படைக்க போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Dis: Sex torches news .

Recommended