ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்!- வீடியோ

  • 7 years ago
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ரயிலில் பலாத்காரம் செய்ய முயன்ற 15 ஆண்களிடம் இருந்து தப்ப தாயும், மகளும் ரயிலில் இருந்து குதித்தனர். தாயும் (40), மகளும் (15) கொல்கத்தாவிலிருந்து டெல்லி செல்வதற்காக கடந்த சனிக்கிழமை இரவு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது ரயில் சந்தாரி- கான்பூர் ரயில் நிலையத்துக்கு இடையில் சென்றது. இதையடுத்து கழிப்பறை சென்ற சிறுமியை அங்கிருந்த நபர் ஒருவர் கையை பிடித்து இழுத்துள்ளார். இதை தடுத்து நிறுத்த முயற்சித்தும் முடியாததால் தாய், தனது மகளுடன் ரயிலில் இருந்து குதித்து விட்டார்.

இதனால் விழுந்த அதிர்ச்சியில் இருவருக்கும் 2 மணி நேரமாக சுயநினைவில்லாமல் கிடந்துள்ளனர். இதையடுத்து மயக்கம் தெளிந்தவுடன் அங்கிருந்து மெதுவாக நடந்து சந்தாரி ரயில் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்த மக்களிடம் நடந்தவற்றை கூறினர்.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைக்கப்பட்டு அவர்கள் இருவரும் லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

A 40-year-old woman and her 15-year-old daughter jumped off a running train after a group of men attempted to rape the girl on board Howrah-Jodhpur Express late Saturday night

Recommended