இந்து தீவிரவாதம் என்போர் தேச விரோதிகள்...மன்னிப்பே கிடையாது!-வீடியோ

  • 7 years ago
இந்து தீவிரவாதம் என்று பேசி தங்கள் அறிவுஜீவித்தனத்தை பணம் பண்ண நினைப்பவர்கள் தேச விரோதிகள். அந்நிய நாட்டு கைக்கூலிகள், அவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். இந்து வலதுசாரிகளில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என நடிகர் கமல் ஹாஸன் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளது மதச் சார்புடைய தலைவர்கள், பிரமுகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கமல் ஹாஸனுக்கு எதிராக அவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வாரணாசி, லக்னோ, சென்னை நீதிமன்றங்களில், கமிஷனர் அலுவலகங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன, புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கமல் ஹாஸன் கருத்துக்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.
லக்னோவில் அவர் பேசுகையில், "பிரபலங்கள் என்ற பெயரில் இந்து தீவிரவாதம் என்றெல்லாம் பேசுபவர்கள் தேச விரோதிகள். நாட்டில் சகிப்புத்தன்மை இல்லை என்றெல்லாம் கூறி தங்கள் அறிவுஜீவித்தனத்தை வைத்து பணம் பண்ணுபவர்கள்.

In an oblique reference to Kamal Hassan, Uttar Pradesh Chief Minister, Yogi Adityanath branded individuals talking about Hindu terrorism as anti-nationals.

Recommended