விடாது கொட்டும் மழை !முடிச்சூரில் சாலையில் அமர்ந்து மக்கள் போராட்டம்- வீடியோ

  • 7 years ago
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.பாதிப்பு நிலை பற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது: மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 249 இடங்களில் தண்ணீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார்.

சென்னை உட்பட கடலோர மாவட்டத்தில் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வேளச்சேரியில் 19 செமீ, நுங்கம்பாக்கத்தில் 18 செமீ மழை பெய்துள்ளது. விடிய விடிய கொட்டிய மழையால் சென்னை மாநகரமே மிதக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Food items provided for the people who staying in relief camps.

Recommended