Priyanka Chopra's Apparel Creates Controversy

  • 7 years ago
அரசு முறை பயணமாக 4 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ஜெர்மனி சென்றபோது நடிகை பிரியங்கா சோப்ரா அவரை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் முன்பு அவர் குட்டைப் பாவடை அணிந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போன்று எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் பிரியங்கா சோப்ரா.இந்த பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் இப்படி அமர்ந்திருப்பதா? அதேபோல், பிரதமரை சந்திக்கும்போது நம்முடைய கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? என நிறைய பேர் பிரியங்காவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

Priyanka Chopra met Prime minister Modi in Germany. Her picture with Modi created controversy regarding her apparel.

Recommended